உன் இதயத்தில் கவிதை இருக்கிறதா - LifeStyle Today

Breaking

Monday, 24 March 2014

உன் இதயத்தில் கவிதை இருக்கிறதா

பார், கவனி, தெளிவு படுத்திப்பார். உனது வாழ்வை திரும்பிப்பார். வேறு யாரும் உனக்கு உதவ போவதில்லை. நீ மற்றவர்களை சார்ந்து வெகுகாலம் இருந்து விட்டாய். இதனால் நீ முட்டாளாகி விட்டாய். இப்போது அக்கறை கொள், இது உன்னுடைய பொறுப்பு. நீ உன் வாழ்க்கைக்கு செய்திருப்பது என்ன என்று ஒரு ஆழமான பார்வை பார்ப்பது என்ற உறுதிமொழியை உனக்கு நீயே கொடுத்துக் கொள்.

உனது இதயத்தில் ஏதாவது கவிதை இருக்கிறதா இல்லையென்றால் நேரத்தை வீணடிக்காதே. உனது இதயத்தை தாலாட்டி கவிதை எழ உதவி செய். உனது வாழ்வில் எங்காவது நேசம் இருக்கிறதா இல்லையா இல்லையென்றால் நீ இறந்துவிட்டாய் என்றே பொருள், நீ ஏற்கனவே உன் கல்லறையில் இருக்கிறாய்.

அதிலிருந்து வெளியே வா. வாழ்வில் ஏதாவது காதல் இருக்கட்டும், சாகசம் ஏதாவது இருக்கட்டும். பரிசோதனை செய்து பார், கோடிக்கணக்கான ஆச்சரியங்களும் அற்புதங்களும் உனக்காக காத்திருக்கின்றன. வாழ்வென்னும் கோவிலுக்குள் நுழையாமல் நீ வெளியேயே சுற்றி சுற்றி வருகிறாய். இதயம்தான் வாசல்.

-ஓஷோ
 —

No comments:

Post a Comment