முழு ஈடுபாடு இல்லாமல் செய்யும் எந்த செயலும்... - LifeStyle Today

Breaking

Saturday, 29 March 2014

முழு ஈடுபாடு இல்லாமல் செய்யும் எந்த செயலும்...

வீட்டை அழகாக வைத்திருக்க விரும்பிய ஒருவர்
...நிறைய செடிகொடிகளை நட்டு வைத்தார்.... உரமிட்டார்.... நீர் பாய்ச்சினார்....

செடிகள் பெரிதாக வளரவில்லை.

பக்கத்தில் ஒரு பூங்காவைப் பராமரிக்கும் கிழவரிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார்.

இரண்டே மாதங்களில் செடி கொடிகள் செழித்து தழைத்து வளரத் தொடங்கின.

வீட்டின் உரிமையாளருக்கு வியப்பு.

அதே தண்ணீர். அதே உரம். அதே இடம்.

இது எப்படி சாத்தியம்?

கிழவர் சொன்னார்: "அய்யா! நீங்கள் அலுவலகத்திற்குப் போகும் அவசரத்தில் நீர்பாய்ச்சுகிறீர்கள். நான், குழந்தைக்கு உணவு தரும் அன்னையின் மனநிலையில் இருந்து நீர்பாய்ச்சுகிறேன்..."

அப்பொழுது தான் உரிமையாளருக்கு புரிந்தது... முழு ஈடுபாடு இல்லாமல் செய்யும் எந்த செயலும்... முழு பயன் தராது...என்று.

No comments:

Post a Comment